Wed. May 15th, 2024

வைத்தியருடன் முரண்பட்ட குடி போதையில் இருந்த 4 இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டதாக புகார்

நேற்றய தினம் 4 இளைஞர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக போத்தல் ஒன்றால் குத்தி காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஏனைய இளைஞர்கள் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொண்ட , வைத்தியருக்கும், குறித்த இளைஞர்களிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் ,காயமடைந்த இளைஞர் தன்னை தானே காயப்படுத்தி இருந்ததாக தெரிவித்திருந்த நிலையில் , குறித்த சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

வைத்தியசாலைக்குச் சென்ற பொலிஸார் அங்கு நின்ற இரு இளைஞர்கள் நான்கு பேரை கைதுசெய்து பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களைப் பார்ப்பதற்காக இளைஞர்களின் உறவினர்கள் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற போது பொலிஸார் தம்மை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்றும், எமது பிள்ளைகளை பொலிஸார் கடுமையாகத் தாக்கியதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.

இதனால் சற்று நேரம் குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்