Tue. May 14th, 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்!! -இதுவரை 588 முறைப்பாடுகள் பதிவு-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் 588 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 565 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் மற்றும் 17 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் 4.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 75 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்