Tue. May 14th, 2024

மைத்திரியின் ஆதரவு சாஜித்க்கு?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கோதபய ராஜபக்ஷவுடன் எந்தவொரு பிரச்சார கூடங்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து பங்குபற்றமாட்டார் என்று ஸ்ரீ.ல.சு.க ஊடக செய்தித் தொடர்பாளர் வீரகுமர திஸ்நாயக்க கூறினார்

ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்ரிபால சிறிசேன சுதந்திரமாக நடுநிலையுடன் செயல்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.
இருப்பினும், ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா கட்சி கோதபய ராஜபக்ஷவை ஆதரித்து வெற்றியடைய செய்யும் என்றும் கோதபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட பேரணிகளை ஸ்ரீ.ல.சு.க ஏற்பாடு செய்துள்ளதாக ஊடக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்றையதினம் அலரிமாளிகையில் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பார் என நம்பிக்கை வெளியிட்டதுடன் உண்மையான சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சஜித்துக்கே வாக்களிப்பார்கள் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்