பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு கட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறிய தமிழ் மக்கள் முன்னணி
பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூடத்தில் ஏற்படுத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் முன்னணி கையெழுத்திடாமல் இன்று வெளியேறியது. யாழ்ப்பாண மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இரண்டாவது நாளாக இன்று இடம்பெற்றது . இன்று இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே முரண்டு பிடித்து வந்த தமிழ் மக்கள் முன்னணி , கூட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் இதர கட்சிகளின் தலைவர்களுடன் வாக்குவாதப்பட்டு கூடத்தில் இருந்து வெளியேறியுள்ளது.
மற்றைய கடசிகளான தமிழரசு கட்சி, புளொட் ,டெலோ ,ஈபிஆர்எல்எப் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி என்பன இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.