அரசியல் கைதிகள் உடனே விடுதலை, 2 வருடத்தில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு, பருத்தித்துறையில் நாமல் ராஜபக்ச
இன்று பருத்தித்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் முன்னிலையில் உறுதிமொழி வழங்கியுள்ளார். இரண்டு வருடத்திற்குள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முற்றுமுழுதாக தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
இன்று ஈபிடிபி ஏற்பாட்டில் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே நாமல் இவ்வாறு
தெரிவித்தார்