Fri. May 17th, 2024

வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை கௌரவிப்பு

13வது தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கல் போட்டியில் வெள்ளி சுவீகரித்த இளம் வீராங்கனை விஜயபாஸ்கர் ஆஷிகா அவர்களுக்கு இன்று யாழ் பளுதூக்கல் விளையாட்டு கழகத்தினால் கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில் யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட், யாழ் கல்வி வலய முன்னாள் உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் சண் தயாளன்,  வடமாகாண விளையாட்டு பணிப்பாளர் குருபரன், யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் விஜிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நேபாளத்தில் நடைபெற்ற பெண்களிற்கான பளுதூக்கல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆஷிகா 64 கிலோ நிறைப் பிரிவில் சினெச் முறையில் 70 கிலோ பளுவையும் கிளின் அன் ஜக் முறையில் இலங்கைக்கான புதிய சாதனையைப் பதிவு செய்து 100 கிலோ பளுவைத் தூக்கி ஒட்டுமொத்தமாக 170 பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
இவருக்கான கெளரவிப்பு நிகழ்வு இன்று யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து வேம்படி மகளிர் கல்லூரி வீதியூடாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.  இதில் வாழ்த்துகள் தெரிவித்த அனைவரும் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல ஆசிகள் வழங்கினர்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்