வீட்டிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
சரவணபவா சேவா அறக்கட்டளை நிலையத்தால் முத்தையன் கட்டு ஜீவநகர் கிராமத்தில் பெண்தலமைத்துவ குடும்பத்திற்கான நிரந்தர வீட்டுக்கான அடிக்கல் கடந்த வியாழக்கிழமை நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் ஓம் சரவணபவா நிறுவனத்தின் இணைப்பாளரும் ஆசிரியருமான து.சுதர்சன், கிராமசேவையாளர், தொழிலதிபர் கீர்த்தி, மாதர் சங்கத்தினர்,பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர், கமக்கார அமைப்பினர்,கிராம அபிவிருத்திச்சங்க செயலாளர் ஆகிய சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.