Fri. May 17th, 2024

நெல்லியடியில் பாதுகாப்பற்ற முறையில் மீன் விற்பனை இருவர் கைது

பாதுகாப்பற்ற முறையில் மீன் விற்பனையில் ஈடுபட்ட இருவரை நெல்லியடி  பொலீஸார் கைது செய்துள்ளனர். நெல்லியடி பகுதியில் 7 லட்சம் ரூபா பெறுமதியான கட்டாப்பாரை மீனை ஐஸ் வசதிகள் இன்றி படிரக வாகனத்தில் விற்பனையில் ஈடுபட்ட இருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்து நெல்லியடி பொதுச் சுகாதார பரிசோதகர் ரவிவர்மா அவர்களால் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை மேண்கொண்ட பருத்தித்துறை நீதவான் உரிய பாதுகாப்பு வசதி மற்றும் உரிய கொள்கலன்கள் என்பவை இல்லாமல் மீன்கள் விற்பனை செய்யக் கூடாது என எச்சரித்ததுடன், பிடிக்கப்பட்ட மீன்கள் கருவாட்டுக்கு பயன்படுத்துவதால் மீனும், வாகனமும் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டதுடன், சாரதி மற்றும் வியாபாரி மீதான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்