Fri. May 17th, 2024

விளையாட்டு பேரவை விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளது

யாழ் மாவட்டத்தில் விரைவில் விளையாட்டுப் பேரவை ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா சங்கத் தலைவர் ப.தா்மகுமாரன் அறிவித்துள்ளாா். முதற்கட்டமாக யாழ். மாவட்டத்திலும் பின்னா் ஏனைய மாவடங்களிலும் விஸ்தாிக்கப்பட்டு பின்னா் வடக்கு மாகாணத்திற்கான விளையாட்டுப் பேரவை முன்னளிக்கப்படும் என அவா் மேலும் தொிவித்தாா். விளையாட்டுத்துறை அமைச்சா் நாமல் ராஜபக்ஸ அவா்களின் வழிகாட்டுதல்களின்கீழ் மேற்படி செயற்திட்டம் முன்னெடுக்கபட்டு பாாிய அளவில் விஸ்தாிக்கப்படவுள்ளதாக  விளையாட்டுத்துறை ஆலோசகா்  ப.தா்மகுமாரன் தொிவித்தாா். அவர் மேலும் தெரிவிக்கையில் விரைவில் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாாிகள், விளையாட்டுக்களில் வர்ண விருது பெற்றவா்கள், பயிற்றுவிப்பாளா்கள், அனைத்துப்பிரிவு மாவட்ட விளையாட்டுச் சங்கங்கள், உடற்கல்விப் பணிப்பாளா்கள், மாவட்ட மட்டத்தில் பல்துறைகளில்  விளையாட்டுக்களில் தலைமை தாங்கியவா்கள் என பல வகுதிகளை கொண்டவா்கள்  இணைத்துக் கொள்ளப்பட்டு முதற்கட்டமாக யாழ். மாவட்டத்திற்கான விளையபட்டுப்பேரவை  அமைக்கப்படவுள்ளது. இப்பேரவை அமைப்பது தொடா்பான காலம், நேரம், இடம்  விரைவில் அமைக்கப்படும் என வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா சங்க தலைவர்  பழனித்துரை தா்மகுமாரன் தொிவித்துள்ளாா்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்