Fri. May 17th, 2024

விபத்தில் தலைமறைவாகியவருக்கு பிணையில் விடுவிப்பு

செய்தியாளர்:- லிங்கம்

நெல்லியடி கொடிகாமம் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில்  ஒருவர் காயமடைந்த போதிலும் விபத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயத்துக்கு உள்ளானவர் படுகாயத்துடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். விபத்தை ஏற்படுத்தியவர் தலைமறைவாக இருந்த நிலையில் நெல்லியடி போக்குவரத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்துள்ளனர். குறித்த நபர்
துன்னாலை குடவத்தை பகுதியை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. நேற்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு கொரோனா காரணத்தினால்5 0,000 ரூபா பிணையில் செல்ல பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி அவர்கள்அனுமதி வழங்கியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்