கரவெட்டியில் கிடாய் திருட்டு
செய்தியாளர் :- லிங்கம்
கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான கிடாய் ஆடு களவாடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் உள்ள வீட்டில் நடைபெற்றுள்ளது.
65 ரூபாவிற்கு வாங்கி வளர்க்கப்பட்ட ஆடே களவாடப்பட்டுள்ளதாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணத் தடை விதிக்கப்பட்ட காலத்திலும் கரவெட்டி பகுதியில் ஆடுகள் களவாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.