மிருசுவில் யா/விடத்தற்பளை கமலாசனி வித்தியாலய வளாகம் வெள்ளக்காடாக மாறியதோடு அவ்வீதியூடான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாடசாலைக்கு மாணவர் வரவு குறைந்துள்ளதேடு ஆசிரியர்களின் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் வீதியை புனரமைத்துத் தருமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இப்பாடசாலைக்கு செல்லும் பிரதான வீதிகளான விடத்தற்பளை வீதியில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு வீதி பலத்த சேதமடைந்ததுள்ளது. மேலும் கச்சாய் கிளாலி வீதியில் பாடசாலைக்கு அண்மையிலுள்ள பாலம் புனரமைப்பு வேலைகள் இடம்பெறவதால் அப்பகுதியூடான போக்குவரத்திற்கும் சிரமம் ஏற்படுகின்றன. இதனால் மழைநேரங்களில் ஆசிரியர்கள்,மாணவர்கள் விபத்துகளுக்கு உள்ளாகும் அபாயமும் காணப்படுகிறது.
குறித்த பாடசாலை வளாகத்தினுள் முழுவதுமாக ஒன்றரையடிக்கு மேலான நீர்மட்டம் காணப்படுவதால் அதனை வடிந்தோடக்கூடிய ஏற்பாடுகளைச் செயாவதோடு போக்குவரத்து வீதிகளை தரமானமுயறயில் செப்பமிட்டுதருவதன்மூலம் மாணவர்களின்கல்விப்பாதிப்பை குறைக்க வழிசெய்யுமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.