வாழைச்சேனையில் இளம் கணவன் மனைவி சடலமாக மீட்பு
மட்டக்களப்பு , வாழைச்சேனையில் உள்ள வாகனேரி பகுதியில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் சடலங்கள் சனிக்கிழமை பிற்பகல் 16.11.2019 மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது
கிண்ணையடி வாழைச்சேனையை சேர்ந்த நமசிவாயம் குணம் (வயது 35) விநாயகன் தேவி (வயது 30) ஆகிய இருவரினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
வாகனேரி மானாவாரியில் உள்ள வயல் பகுதியில் மனைவியின் சடலமும் அங்குள்ள காட்டுப் பகுதியில் கணவனின் சடலமும் உறவினர்களின் உதவியுடன் பொலிஸாரால் மீட்கப்பட்டது
மீள்திக விசாரணைக்காக சடலங்கள் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் மேற்கொண்டுவருகிறார்கள்