வானொலி செய்தியாளரது ஊடக சாதனங்களை திருடி அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது
வானொலி ஒன்றின் பிராந்திய செய்தியாளரது ஊடக சாதனங்கள் சிலவற்றை திருடியதுடன், அவருக்கு அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் 28/3/2020 சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை – ஹப்புத்தளையில் சில இடங்களில் ஊரடங்கு வேளையிலும் கடைகள் திறக்கப்பட்டிருந்தமை தொடர்பான செய்திகளை சேகரித்து வெளியிட்டமை தொடர்பிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.