வவுனியாவில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வவுனியாவில் தொற்றுக்குள்ளானவரின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வவுனியாவில் நேற்று மாத்திரம் 49 ஆல் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் PCR பரிசோதனையில் 24 பேருக்கும், யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 25 பேருக்கும் என 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வவுனியாவில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.