யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு கொரோனா
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கோப்பாய் பிரதேச சுகாதார பணிமனைக்குட்பட்ட ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் திருத்தும் பணிக்காக கொழும்பு சென்று வந்துள்ளதாகவும், தொண்டை நோ காரணமாக தாமாகவே முன்வந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் PCR பரிசோதனைக்கு உட்பட்ட நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.