Fri. May 17th, 2024

வவுனியாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வவுனியாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் ஒரு தொகுதியினரின் முடிவுகள் நேற்று  மாலை வெளியாகிய நிலையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் வவுனியானின் ஈச்சங்குளம் உள்ளிட்ட  பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்