நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது/ போராட்டம் நிறைவுக்கு வந்தது
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவடைந்தது.
சற்று முன்னர் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டு விழாவை அதே இடத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராசா ஆரம்பித்து வைத்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பானம் வழங்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.