Tue. May 21st, 2024

வவுனியாவில் புகையிரத நிலையத்தில் குழப்பம் விளைவித்த  அரசியல் கட்சி இணைப்பாளருக்கு விளக்கமறியல்

வவுனியா புகையிரத நிலையத்தில் நேற்று குழப்பம் விளைவித்து புகையிரத நிலைய அதிபரை அச்சுறுத்தியது குறித்து முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பொலிசாரால் கைது செய்யப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் வவுனியா புகையிரத நிலையத்துக்கு சென்ற வவுனியா மாவட்ட அரசியல் கட்சி ஒன்றின் இணைப்பாளர் உட்பட இருவர் அங்கு கடமையில் இருந்தபோது தன்னுடைய பணியாளர்களுடன் தகாத வார்த்தை ஏற்படுத்தி அதிபரை அச்சுறுத்தி அவர்களது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவித்து குறித்த நபரை கைது செய்யாவிட்டால் புகையிரத நிலைய பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு முறையிடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று குறித்த நபர் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்பட்டபோது அவர்கள் இருவரையும் நாளை வரை ஒருநாள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்