வவுனியாவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது
வவுனியாவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் திருடப்பட்ட மூன்று ஆடுகள் மற்றும் மோட்டார்களை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைது நடவடிக்கை தலைமை பொறுப்பு அதிகாரி பீ.ஆர்.வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.திஸாநாயக்க தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்