Sun. May 19th, 2024

யுத்தத்தின் பின்னர் விமானப்படை- எஸ்.ரி.எவ் கூட்டு அதிரடி நடவடிக்கை!

யுத்தத்தின் பின்னர் இலங்கை விமானப்படை மற்றும் விசேட அதிரடிப்படையினர் வான்வழியாக மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 4 ஏக்கர் கஞ்சா தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஹம்பேகமுவ, குடாஓயா, தனமல்வில பகுதிகளில் அமைந்திருந்த 4 ஏக்கர் பரப்பளவிலான 8 கஞ்சா தோட்டங்கள் அழிக்கப்பட்டன.ஆளில்லா உளவு விமானங்கள் மற்றும் பீச்கிராப்ட் உளவு விமானங்களின் மூலம் உளவுத்தகவல்களின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஹெலிகொப்டர்களில் சென்று, கஞ்சா தோட்டங்களில் தரையிறங்கிய அதிரடிப்படையினர், அவற்றை அழித்தனர்.இந்த நடவடிக்கையில் , 1,59,630 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.மேலும் இந்த சம்பவம் தொடபில் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்