Sun. May 19th, 2024

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – 05 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

டிப்பர் ரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

வலக்கும்புர பகுதியில் மரண வீட்டினரிற்கு சென்று மீள குருநாகல் நோக்கி பயணித்த மகிழூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காரில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த 05 பேரும் கட்டுமான நிறுவனமொன்றில் தொழில் புரிபவர்கள் என கூறப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்