கசிப்பு காச்சியவர் கைது செய்து பிணையில் விடுதலை
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கணை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் இடுபட்ட சந்தேகநபர் ஒருவரை நேற்று முன்தினம் தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 80 லீற்றர் கசிப்பு 250 லிட்டர் கோடாவும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்