வலம்புரி அலுவலகச் செய்தியாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
வலம்புரியின் அலுவலக செய்தியாளர் விஜயநாதன் ஜனார்தன் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் பிரவுன் வீதியில் இடம்பெற்றது. பணி முடிந்து அலுவலகத்திலிருந்து ஜனார்த்தன் மோட்டார் சைக்கிளில் தனது சொந்த இடமான ஊரரெழுக்குப் புறப்பட்ட வேளை யாழ்ப்பாணம் பிறவுண்வீதி இரண்டாம் ஓழுங்கையில்
மோட்டார் சைக்கிளில் முகத்தை கருப்புத் துணியால் கட்டி வந்தவர்கள்
இடைமறித்து கம்பிகளால் மற்றும் கொட்டன்களால் தாக்கியதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினர். சம்பவத்தை அறிந்து அயல் வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்தவுடன் தாக்குதல் நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது