வழித்தேங்காய்கள் அமைப்பினரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
நெல்லியடி வழித்தேங்காய்கள் அமைப்பினரால் உலர் உணவுப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது.
கனடா நாட்டில் வசித்து வரும் த.இளங்கீரன் அவர்களின் நிதியுதவியுடன் தெரிவு செய்யப்பட்ட 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. அல்வாய் வடக்கு, வடமத்தி மற்றும் இலகடி பிரதேசத்தில் பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்டு நாளாந்தம் கூலி பெறுகின்ற மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த 40 பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.