Thu. May 16th, 2024

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 07 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 07 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 கொள்ளை சந்தேக நபர்களிடம் நபர்களிடமிருந்து பத்து லட்சம் ரூபா மேற்பட்ட நகைகள் உட்பட பெறுமதியான பொருட்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் 23 .24 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் என்றும் போதைப் பொருட்களுடன் அடிமையாகிய நிலையில் கொள்ளை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகள் வாங்கிய குற்றம் சாட்டில் 45 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்தது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்தநிலையில் போதைப் பொருட்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

4 சந்தேக நபர்களிடமிருந்து  10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள் உருகிய நிலையில் தங்கங்கள் தொலைக்காட்சிப்பெட்டி,  மோட்டார் சைக்கிள் 16 அலைபேசிகள் ஆப்பிள் ஐபாட் ஒன்று மற்றும் கிட்காட் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்தனர்.

விசாரணைக்கு பின் நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட்டுள்ளார்கள். தொடர்ந்து நான்கு சந்தேக நபர்களின் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்