வலி.வடக்குக்கு நாமல் விஜயம்
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் அழைப்பையேற்று நேற்றைய தினம் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் பார்வையிட்டார்.
தெல்லிப்பளை வறுத்தலைவிளான் பகுதியில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்துக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகளை அமைச்சர் நாமல் ராஜபக்ச பார்வையிட்டதுடன், வலி வடக்கில் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்துவரும் காணியற்ற மக்களுக்காக உருவாக்கப்படும் வீட்டுத்திட்டத்தின் பணிகளையும் பார்வையிட்டார்.
இத்திட்டத்தின் ஊடாக சுமார் 30 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், அம்மக்களுக்கான காணி, வீடு, மற்றும் அடிப்படை வசதிகளை அரசாங்கம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விஜயத்தின் போது மக்களால் முன்வைக்கப்பட்ட மலசலகூடங்களை அமைத்தல், உள்ளக வீதி அமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கவனத்தில் கொள்வதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இத்திட்டத்தினை முன்னெடுத்த யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கு அப்பகுதி மக்களால் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.