வறுமை கல்விக்கு தடையல்ல, இராஜகிராம மாணவர்கள்
வறுமை என்பது கல்விக்குத் தடையல்ல என்பதை இரு மாணவர்கள் உலகறிச் செய்துள்ளனர். 2020ம்ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் இராஜகிராமம் கரவெட்டி மேற்கு கரவெட்டியைச் சேர்ந்த
வசந்தன் அபிஷா 175 புள்ளிகள்,
அகிலன் அயன் 162 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் யா/கரவெட்டி விக்னேஸ்வரா ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்கள்.
இவர்களின் வீட்டுச் சூழல் வறுமையில் இருந்த போதும் கல்வியில் சாதித்துள்ளனர்.இவர்கள் இருவரையும் அப்பகுதி கிராம அலுவலகர் தனது அலுவலகத்தில் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களின் தேவையறிந்து அவர்களுக்கான உதவிகளை பல்வேறுபட்டவர்களிடம் பெற்று வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார். கிராம அலுவலகரின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கும் மாணவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.