வட.இந்து மகளிருக்கு கபடியில் வெண்கலம்
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கபடிப் போட்டியில் வட.இந்து மகளிர் கல்லூரி அணி வெண்கல கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான கபடி போட்டிகள் கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 3ம் இடத்திற்கான ஆட்டத்தில் வட.இந்து மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து கிளிநொச்சி மகா வித்தியாலய அணி மோதியது. இதில் வட.இந்து மகளிர் கல்லூரி அணி 36:28 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கல கிண்ணத்தைக் கைப்பற்றினர்.