வடமாகாண டயலொக் கிண்ண கரப்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டம் இன்று
யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ரீதியில் நடைபெற்ற டயலொக் ஜனாதிபதி தங்க கோப்பை கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டப் போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி, தொண்டைமானாறு கலையரசி அணி, ஆவரங்கால் மத்தி அணி மற்றும் புத்தூர் வளர்மதி அணிகள் அரையிறுதிக்கு தெரிவு செய்யப்பட்டு இன்று காலை 9 மணிக்கு அரையிறுதியாட்டங்கள் புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதன் இறுதியாட்டம் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு குறித்த கழக மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று 26 கழகங்கள் பங்கு பற்றிய தொடரில் 1வது கால் இறுதியில்
கிளிநொச்சி புதிய பாரதி விளையாட்டு கழகத்தினை தொண்டைமானாறு கலையரசி வி.கழகமானது 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது.
2வது கால் இறுதியில்
ஆவரங்கால் இந்து இளைஞர் வி.கழகம் புத்தூர் கலைமதி அணியை 2:0 என வென்று அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது.
3வது கால் இறுதியில்
ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியை 2;0 என வென்று அரையிறுதிக்கு தகுதி
4வது கால் இறுதியில்
புத்தூர் வளர்மதி விளையாட்டு கழகம் சண்டிலிப்பாய் இந்து இளைஞன் அணியை 2;1 என வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.