Sat. May 18th, 2024

வடமராட்சி மத்திய கல்லூரியில் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் கட்டடத் திறப்பு விழா தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்துடன் இணைந்த வகுப்பறை கட்டடத் தொகுதி மற்றும் உள்ளக விளையாட்டரங்கு என்பன திறந்து வைக்கப்பட்டது.

இந்திய துணைத் தூதுவரின் பிரதிநிதியான எம்.கிருஷ்ணமூர்த்தி,  வடமாகாண ஆளுநர் சார்ள்ஸ், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட 6வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி லெப்டனன் கேணல்டிபால் பெர்ணாண்டோ,

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்  அங்கஜன் இராமநாதன், வடமாகாண கல்வி பணிப்பாளர் செ.உதயகுமார்,  வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன், கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ. தயாரூபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்