Sun. May 19th, 2024

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக செயற்பாடுகள் மீனவர்களால் முடக்கம்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக செயற்பாடுகள் மீனவர்களால் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலிருந்து  கடற்றொழிலுக்கு சென்று இருவர் காணாமல் போயிருந்த   நிலையில் நேற்றைய தினம்  31/01/2022 சடலமாக ஆழியவளை பகுதியில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இத்தகைய செற்பாட்டை கண்டிக்கும் வகையில்  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை வடமராட்சி கிழக்கு மீனவர்கள்  முற்றுகையிட்டு பணியாளர்கள் எவரும் உள்ளே செல்லாத வகையில் முடக்கி  வடமராட்சி கிழக்கு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இறந்த உறுவுக்கு நீதி வேண்டும், அரச அதிகாரிகளே திரும்பிப்பார், மீனவர்கள் வயிற்றில் அடிக்காதே, உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து, தமிழர்கள் என்றால் நாய்களாக, மீனவர் வாழ்க்கை யார் கையில், எமது நாடு எமக்கு வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பிரதேச செயலக அதிகாரிகள் எவரும் உள்ளே  செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதில் முன்னாள் மாகாண, சபை உறுப்பினர் ச.சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.சுரேஸ்குமார், வே.பிரசாந்தன், தவிசாளர் ச.அரியகுமார், பிறேமதாஸ், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி ச.திரவியராசா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்