வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கும் கோரோனோ
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு நேற்று முன்தினம் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக மக்களுக்கான தனது கடமைகளை அலுவலகத்தில் மூடிய கண்ணாடி அறையிலிருந்து ஆற்றிவந்த நிலையிலும் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது
தற்போது கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மக்களைத் தேவையற்று சந்திக்காமல் அதீத பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தி ஏற்படுத்தியிருந்தார் .
இந்தநிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்பொழுது தனிமைபடுத்தப்பட்டு வருகிறார்கள்