Fri. May 17th, 2024

வடமராட்சி அத்தாய் பகுதியில் உறவினர்களிடையே சண்டை, 3 பேர் காயம், இருவர் கைது

16.05.2020அன்று மாலுசந்தி அத்தை பகுதியில் உறவினர்களிடையே நேற்று தொடங்கிய சண்டை பின்னர் தணிந்திருந்த நிலையில் இன்று 17 ஆம் திகதி திரும்பவும் இருபகுதியினர்களுக்கும் சண்டை ஆரம்பமாகி உள்ளது. இதுவரைபருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆஸ்பத்திரியில் 3 பேர் காயங்களுடன்  அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.  சிவானந்தராஜா விஜயன் 26 வயது ராமு கனகசபை 82 வயது மகாலிங்கம் ஆஷா இவர்கள் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் இருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்படுள்ளார்கள். நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்