Fri. May 17th, 2024

தந்தையால் பாலியல் தொல்லை தற்கொலைக்கு முயன்ற சிறுமி

புதுக்குடியிருப்பு சிவன் நகர் 7 ம் நகர்ப்பகுதியில் பதின்ம வயது சிறுமி தந்தையால் துஸ்பிரயோகம் நடைபெறுவதாகவும் சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் கவனமெடுக்குமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் பதின்ம வயது சிறுமி தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது…
குறித்த சிறுமி தந்தையின் பாலியல் தொல்லை அதிகரித்ததால் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் தற்போது பெற்றோரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிறுமியை சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள் பெண்கள் பாதுகாப்பு அமைப்புக்கள் அரச
அமைப்புக்கள் கண்டுகொள்ளாத நிலை தொடர்கின்றது..
இந்நிலை தொடர்ந்தால் சிறுமி மனஉளைச்சலு்கு உள்ளாகி தற்ாெலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் எனவே உரியவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்