Thu. May 16th, 2024

வடமராட்சியில் ஒன்று கூடும் மதுப் பிரியர்கள்

வடமராட்சி நெல்லியடி பகுதியில் இயங்கும் மதுபான விற்பனை நிலையம் முன்பாக பலர் கூடி மதுவை வாங்கிச் செல்லும் காட்சி பலரிடத்தேயும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக முகக் கவசம் அணிதல், மற்றும் சமூக இடைவெளி பேணல் என பலதரப்பினரும் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர்.
அத்துடன் வடமராட்சி பகுதியில் முகக் கவசத்தை முறையாக அணியாதவர்களை எழுமாற்றாக பரிசோதனை மேற்கொண்ட போது அவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் 3 தினங்களுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டதாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
சிலர் பயணத் தடையை காரணம் காட்டி பணம் படைத்தவர்கள் மதுசாரத்தை கொள்வனவு செய்து மதுவிற்கு அடிமையாகி இருக்கும் ஏழைகளுக்கு அதிக விலைக்கும் விற்பனை செய்கிறார்கள். இதை தடுப்பதற்கு சட்ட விரோதமாக மதுசாரத்தை விற்பனை செய்பவர்களை பொலீஸாருக்கு தெரியப்படுத்துவதே சிறந்தது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்