Fri. May 17th, 2024

வடக்கு மாகாண ஆளுநர் முடிவு

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சகல அமைச்சுக்கள் , திணைக்களங்களின் பணியாளர்களின் சொந்த நிதிப் பங்களிப்புடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களினதும் நிதிப்பங்களிப்புடன் நிவாரண உதவியை முன்னெடுக்கும் அதேநேரம் உள்ளூராட்சி மன்றங்கள் அரச நிதியை பயன்படுத்த அனுமதிப்பதில்லை என வடக்கு மாகாண ஆளுநர் தலமையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சகல அரச ஊழியர்களிலும் நிறைவேற்று அதிகாரிகள் ஆயிரத்து 500 ரூபாவும் இடை நிலை உத்தியோகத்தர்கள் ஆயிரம் ரூபாவும் தொழிலாளர்கள் 500 ரூபாவும் நிதிப் பங்களிக்கும் அதேநேரம் வடக்கு மாகாணத்தில் உள்ள 2 ஆயிரத்து 224 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களினதும் சொந்தப் பங்களிப்பிலான பணங்களில் பிரதேச செயலகங்கள் உறுதி செய்யும் பட்டியலிற்கு நிவாரண வழங்கலை மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்