கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் உலர் உணவு உதவி
10.04.2020 இன்று வடமராட்சி பகுதியை சேர்ந்த விழிப்புலன் செவிப்புலனற்ற 80 க்கு மேற்பட்ட குடும்பத்தினற்கு உப உணவுப் பொருட்கள் மரக்கறி வகைகள் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் அவர்கள் தனது சொந்த நிதியில் தனது இல்லத்தில் வைத்து வழங்கி உள்ளார். ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் வந்த நாள் தொடக்கம் தவிசாளர் ஐங்கரன் அவர்கள் தொடர்ச்சியாக வடமராட்சியில் உள்ளதினக் கூலி வேலைக்கு செல்வோர் இனங்கண்டு உதவி செய்துவருகிறார்.
ஏனைய பிரதேச உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் இது போன்ற உதவிகளை செய்யவேண்டும் என்று மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்கள்.