Fri. May 17th, 2024

ஊரடங்கு நேரத்தில் மனைவிக்கு மருந்து எடுக்கச் செல்வதாக தெரிவித்து ஹெராயின் கடத்திய நபர் கைது

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போது மருந்து சிட்டையை பயன்படுத்தி மனைவிக்கு மருந்து எடுக்கச் செல்வதாக தெரிவித்து முச்சக்கர வண்டியில் ஜா-எல பிரதேசத்திற்கு சென்று நீர்கொழும்பு பிரதேசத்திற்கு ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு வந்த நபர் உட்பட இருவரை நீர்கொழும்பு போதைப் பொருள் பிரிவு பொலிஸார் இன்று (10) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 17 கிராமுக்கு அதிகமான ஹெரோயினையும் முச்சக்கர வண்டியொன்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், நீர்கொழும்பு பிரதேசங்களில் விற்பனை செய்வதற்காகவே குறித்த ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு வரப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதே நேரம் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அநுராதபுரம் – கல்நேவா பிரதேச சபையின் இளம் உறுப்பினர் (29-வயது) இன்று (10) தம்புத்தேகம பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 6 கிராம் 10 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்