வடக்கில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நேற்று சனிக்கிழமை வடமாகாணத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்
யாழ் வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 658 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. வடமாகாணத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்பகுதி சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தல் இருந்த தற்காலிகமாக நல்லூர் பகுதியில் வசித்த ஒருவருக்கும் வடக்கு மாகாணத்துக்கு வெளியே சென்று வந்த ஒருவருக்கும், முல்லைத்தீவு பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.