போராட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் இணைந்துள்ளார்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் யாழ் இந்துக்கல்லூரி மாணவனும் இணைந்துள்ளமை அனைவரையும் ஈர்த்துள்ள விடயமாக மாறியுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று இரண்டாவது நாளாக தமது போராட்டத்தை பல்கலைக் கழகத்திற்கு முன்பாக நடாத்திவரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் ஒருவரும் இணைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டதற்கு எதிர்புத் தெரிவித்து,
1.இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்க வேண்டும்.
2. பல்கலைக்கழக வளாகத்தை விட்டு பொலீஸார், இராணுவத்தினர் விலக வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.