Fri. May 17th, 2024

லஞ்சம் வாங்கிய 2 தமிழ் மற்றும் ஒரு சிங்கள நெல்லியடி பொலிஸ்க்கு இடமாற்றம்

தேர்தல் முடிந்த கையோடு நெல்லியடியில் 3 போலீசாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் நீதிமன்ற வழக்குகளுக்கு  சென்று வருபவர். மற்றவர் போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர். மூன்றாவது போலீசார் தொலைபேசி மூலம் பொதுமக்களோடு உரையாடுபவர் என்று தெரியவருகிறது. இவர்கள் மீது பாரிய லஞ்ச குற்ற சாட்டுகள் சுமத்தப்பட்டு பொது மக்களாலும் சமூக ஆர்வலர்களாலும் பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இவர்களின் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. வழக்குகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து தண்ட பணத்துக்காக லஞ்சம் பெற்றுள்ளனர். இவர்களில் இருவர் தமிழர் மற்றவர் சிங்கள இனத்தை சேர்ந்தவர். இவர்கள் தற்பொழுது பலாலி மற்றும் காங்கேசன்துறை பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரியும் இருந்துள்ளபோதும் அவருக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்