Tue. May 21st, 2024

பாறை மீது மோதிய தென்னிலங்கை மீனவர்களின் படகு

கடற்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரோலர் படகு ஒன்று கற்பாறையில் தரைதட்டி சாய்ந்த நிலையில் காணப்படுகின்றது.

தென்னிலங்கையின் காலி மாவட்டப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ரோலர் படகு ஒன்றில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

அவர்கள் வடபகுதி கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களின் இயந்திரம் பழுதடைந்ததால் பெருமளவான மீன்கள் படகில் இருந்த காரணத்தினால் மெதுவாக படகை செலுத்தி சென்றுள்ளனர்.

இந்நிலையில் பருத்தித்துறை இன்பர்சிட்டி கடற்கரை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(22) மாலை மேற்படி டோலர் படகு கற்பாறை ஒன்றுடன் தரைதட்டி அரைவாசிப் பகுதி சரிந்த நிலையில் காணப்படுகிறது.

மேற்படி படகில் ஐந்து மீனவர்கள் இருந்த போதிலும் அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்