பொருத்தமானவர்கள் மட்டுமே ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படுவர்
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை நியமனங்களை தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , கடந்த அரசாங்கத்தைப் போன்றல்லாமல் தனது ஆட்சியில் இராஜாங்க அமைச்சர்களுக்கும் அவர்களது கடமைகளை நிறைவேற்ற வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
அத்துடன் இராஜாங்க அமைச்சர்களை தெரிவு செய்வதற்கு நியமிக்கப்படும் தெரிவுக்குழுவினால் பரிந்துரைக்கப்படுபவர்களில் பொறுத்தமானவர்களே இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்படுவர்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்