Tue. May 21st, 2024

“றேஞ்சஸ் பிறீமியர் லீக் ” (RPL) ஆரம்ப நிகழ்வு

கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் வடமராட்சி, பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்குகளின் அனுமதியோடு யாழ்பீச்சின் பிரதான அனுசரணையோடு “றேஞ்சஸ் பிறீமியர் லீக்”(RPL) உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று சனிக்கிழமை றேஞ்சஸ் விளையாட்டு கழக மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் உ.வினோத் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், கெளரவ விருந்தினர்களாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதி நிர்வாகப் பொதுச் செயலாளர் தி.வரதராஜன்,  இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிப் பொருளாளர் அ.நாகராஜன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன்,  யாழ் மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுநர் பா.முகுந்தன்,  பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் செயலாளர் அ.அருளானந்தசோதி, செலான் வங்கி வடமாகாண கடன்பிரிவு உத்தியோகத்தர் வ.பத்மஸ்ரீ, கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் தி.திருஞானசேகரன், வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் நடுவர் சங்கத்தின் பொருளாளர் த.லக்ஸ்மன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்