Sun. May 19th, 2024

யாழ் மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடமாகாணத்தில் 40 பேருக்கு தொற்று

யாழ் மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடமாகாணத்தில் நேற்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின் அடிப்படையில் யாழ் சுகாதார பிரிவில் 7, சாவகச்சேரி சுகாதார பிரிவில் ஒருவருக்கும்,  மானிப்பாய் ஆதார வைத்தியசாலையில் 2 பேருக்கும்,  மருதங்கேணி சுகாதார பிரிவில் 2 பேருக்கும்,  பருத்தித்துறை சுகாதார பிரிவில் 2 பேருக்கும்,  ஊர்காவற்துறை சுகாதார பிரிவில் 2 பேருக்கும்,  கரவெட்டி சுகாதார பிரிவில் 2 பேருக்கும்,  காரைநகர் சுகாதார பிரிவில் 2 பேருக்கும்,  யாழ் வைத்தியசாலையில் 4 பேருக்கும் என 25 பேருக்கு யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைவிட முல்லைத்தீவில் 7 பேருக்கும்,  செட்டிகுளம் சுகாதார பிரிவில் ஒருவருக்கும்,  ஆனைவிழுந்தான் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும்,  பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 3 பேருக்கும்,  மன்னார் வைத்தியசாலையில் ஒருவருக்கும், புதுக்குடியிருப்பு சுகாதார பிரிவில் 2 பேருக்கும் என வடமாகாணத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்