யாழ் நகரத்தையும் சுத்தப்படுத்தும் பொலிஸார்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் சுற்றுச் சூழலைச் சுத்தப்படுத்தும் பணியில் பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் நகரத்தை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று போலீஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டது
இந்த நிகழ்வு இன்று காலை 7.30 மணி முதல் யாழ்ப்பாண முனியாப்பர் கோவிலில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மற்றும் மாநகரசபை ஆகியன இணைந்து இந்தச் செயற்திட்டத்தை யாழ்மாநகரில் முன்னெடுத்தனர். இந்த செயல் நிகழ்வில் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் உட்பட உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்.