Fri. May 17th, 2024

போலீஸ் மோப்பநாய்கள் பிரிவு மேலும் வலுவாக்கப்படவுள்ளது

இலங்கை போலீஸ் திணைக்களத்தின் மோப்ப நாய்கள் படை மேலும் வலுவாக்கப்படும் என்று இலங்கை போலீஸ் மோப்ப நாய்கள் பிரிவு தலைவர் எஸ்.எஸ்.பி லால் செனவிரத்ன தெரிவித்தார்

நாட்டில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதில் போலீஸ் மோப்ப நாய்களின் பங்கு அளப்பரியது என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக பொதுமக்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று கண்டியில் இடம்பெற்ற புதிதாக பயிற்றுவிக்க பட்ட 40 மோப்ப நாய்கள் பயிற்சி முடித்து கடமைக்கு அனுப்பும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே இதனை அவர் தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்