Fri. May 17th, 2024

யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்து, ஒருவர் பலி, இருவர் காயம்

யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகி  பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது

இதன் பொழுது ஒரு தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் இருவர் படு காயமடைந்துள்ளார்கள் . பருத்தித்துறை மணல் காட்டுப்பகுதியில் இன்றைய தினம் தீயினை அழைப்பதற்காக குறித்த தீயணைப்பு வாகனம் சென்று கொண்டிருந்த போதே யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி அத்தியார் இந்துக்கல்லூரி அண்மையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது தீயணைப்பு வாகனத்தில் வலது பக்கம் முன் டயர் காற்று போனதன் காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு விலகி அருகில் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது இச்சம்பவத்தில் குறித்த வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 37 வயதான அரியரத்தினம் சகாய ராஜா என்னும் தீயணைப்பு வீரர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் மேலும் விபத்துக்குள்ளான தீயணைப்பு வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்  மேலதிக விசாரணையினை அச்சுவேலி பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்