Tue. May 21st, 2024

வடமராட்சி அல்வாயில் பெற்றதவறுதலாக கதிரையில் இருந்து விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் சிறுவன் ஒருவன் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் ஜெபநேசன் .சியோன் என்ற 03.சிறுவனே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் வீட்டில் கதிரையில் இருந்த போது தவறுதலாக மேடையில் விழுந்துவிட்டான். சிறுவன் விழுந்ததை பெற்றோர்கள் பெரிதும் கவனத்தில் எடுக்காத நிலையில் குறித்த சிறுவன் நேற்றைய தினம் தலைப்பகுதி வீங்கி காது பகுதிகள் வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தான். அத்துடன் சிறுவனுக்கு காய்ச்சலும் இருந்துள்ளது. இதனால் நேற்று  மதியம் குழந்தையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்